சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களில் பலர் இரகசிய முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.